April 2026

இறுதி அத்தியாயம்

காலையில் இருந்து ஒவ்வொரு இடத்திற்கும் ஓடி ஓடி களைத்தவன் அவள் தோளில் தலை சாய்க்க இவ்வளவு நேரமும் அடக்கி வைத்த பாரமெல்லாம் கண்ணீராய் வெளியேறியது. முதலில் யாழினியும் அணைத்தவள் அவன் கண்ணீரைக் கண்டு திடுக்கிட்டாள். “ஆதி“ “…..” “ஆதி“ “…..” “ஆதி இங்கே பாருடா. இங்க பாரு. நீ என்ன சின்ன குழந்தையா?” என்று யாழினி கேட்க ஆதி தன்னை கட்டுப்படுத்தியவன் அவளை தன் கை வளைவில் கொண்டு வந்தான். “பேபி என்ன மன்னிச்சிடு. நான் அப்போ வேணும்னே தப்பு செஞ்சேன். ஆனா இன்னைக்கு அவ்ளோ கவனமா இருந்தும் எப்டி தவறவிட்டேனு தெரில” என்று ஆதி பேச ஆரம்பித்த போது விஷ்ணுவும், மித்ராவும் உள்ளே வந்தார்கள். “பில் பே பண்ணியாச்சு மச்சி. கிளம்பலாம்” என்றவுடன் யாழினி வீட்டுக்கு அனைவரும் சென்றார்கள். அனைவரையும் வரவேற்ற யாழினியின் பெற்றோர் நடந்ததை விசாரிக்க அவர்களிடம் அனைத்தும் கூறினான். “அங்கிள் ஆன்ட்டி நான் யாழினிக்கிட்ட தனியா பேசணும்” என சொல்ல குணசேகரன் அனுமதி கொடுக்க யாழினியின் அறையை நோக்கி சென்றான். “பேபி“ அவனை பார்த்தவள் ஓடி வந்து அணைத்து கொண்டாள். “பேபி பேபி” என்றவன் முத்தத்தால் அவளை அர்ச்சித்தான். “நான் இன்னைக்கு ரொம்ப பயந்துட்டேன் பேபி” என்றவனை முறைத்தவள் “காலைல கிளம்பறப்ப ஒரு வார்த்த சொல்லிட்டு போனா என்ன?. உன் முகமே சரியில்லனு எவ்ளோ கவலப்பட்டேன் தெரியுமா?” “நம்ம டிமார்ட்ல பாம் இருக்குனு வினித் சொன்னான் பேபி. எனக்கு அந்த பதட்டத்துல ஒண்ணும் புரில. ஆனா உன்கிட்ட சொல்லி நீயும் பயந்திட்டினா என்ன பண்றதுனு தான் ஒண்ணும் சொல்லல“ “என்ன சொல்ற ஆதி. யார் பாம் வைச்சது?” என்ற யாழினியின் நடுங்கிய குரலில் “ஒண்ணும் இல்லடா. அத டிஃபியூஸ் பண்ணியாச்சு. வச்சது வசுதேவ்” என்று தலை குனிந்தபடி கூறினான். “ஆதி அவன் பண்ண தப்புக்கு நீ ஏன்டா தலைகுனியற?” “அவன் என்ன தான் கெட்டது பண்ணாலும் அவனோட கம்பெனியே பாம் வைக்கற அளவுக்கு போவானு நினக்கல. அதுவும் நம்ம கம்பெனி தான. அவன எப்படி கொண்டு வரணும்னு நினச்சேன்” என ஆதி வேதனையுடன் கூற “விடு ஆதி. அவன சரி பண்ணிடலாம். நான் பாத்துக்கறேன்” என்று சொன்னவளை கசப்புடன் பார்த்தான். “உன்ன எப்படி கடத்தினாங்க பேபி?” “நீ ஆஃபிஸ்க்கு வெளிய வெயிட் பண்ணிட்டு இருக்கறதா தேவ் சொன்னானு வெளிய வந்தப்ப கடத்திட்டு போயிட்டாங்க“ “நான் அப்போ இருந்த பதட்டத்துல ஒண்ணும் யோசிக்கல“ “அது தேவ்வோட பிளான் பேபி. பார்ட்டிலயும் அவனுங்க தான் பிளான் பண்ணிருக்காங்க“ “என்ன மன்னிச்சிடு பேபி. என்னால அப்பயும் உனக்கு சந்தோஷம் இல்ல. […]

இறுதி அத்தியாயம் Read More »

அத்தியாயம் 26

அடுத்த இரண்டு நாட்கள் அமைதியாக செல்ல அதிதேவ் அலுவலகத்தில் வேலை செய்து கொண்டு இருக்கும் போது அவனது தொலைபேசி அடிக்க போனை எடுத்தவன் கேட்ட செய்தியில் திடுக்கிட்டு எழுந்தான். “டேய் என்ன சொல்ற?” “ஆமா. உன்னால முடிஞ்சத பாத்துக்கோ” என்று சிரிப்புடன் அந்த குரல் போனை கட் பண்ண அடுத்து என்ன செய்வது என புரியாமல் குழம்பி நின்றான். அவன் திடீரென்று எழுந்து நின்றதன் காரணம் புரியாமல் “ஆதி என்னாச்சு?” என யாழினி கேட்க “ஒண்ணும் இல்லடா. நீ வொர்க்க பாரு” என்றவன் யாழினி என்ன என்று உணரும் முன்னே அவளை அணைத்தவன் அதே வேகத்தில் அவளை விட்டு விலகியும் சென்றான். யாழினியோ அவனின் செய்கைக்கான காரணம் புரியாமல் தவித்தாள். ஆதி அங்கிருந்து நேராக விஷ்ணுவின் அறைக்கு சென்றவன் அவனை அழைத்து கொண்டு வேகமாக புறப்பட்டான். “ஆதி என்னாச்சு?. ஏன் இவ்ளோ டென்சனா இருக்க?” “நம்ம வேர்ஹவுஸ்ல பாம் வெச்சிருக்காங்கனு போன் வந்ததுடா“ “ஆ… ஆதி என்ன சொல்ற?” “ஆமா” என்றவன் போன் செய்து கொண்டே காரை ஓட்டினான். “யாருடா போன் பண்ணது?” “வினித்” என்றவன் முகம் இறுக காரை ஓட்டினான். ஆதி போகும்போதே தனது அலுவலகத்துக்கு போன் செய்தவன் அங்கிருந்த ஊழியர்களை வெளியேற சொன்னான். அதே போல் பாம் ஸ்குவாட்டுக்கு போன் செய்து அவர்களை வரவழைத்தான். அந்த வேர்ஹவுஸில் நுழையும் போது ஒரு நிமிடம் அசைவற்று நின்று விட்டான். ‘ஒவ்வொன்னும் எவ்ளோ கஷ்டப்பட்டு பண்ணோம். பர்மிஷன்ல இருந்து பிக் சேல் வரையும். இதெல்லாம் என்ன விட்டு போயிடுமா‘ ஆதியின் மனம் ஒரு நிமிடத்தில் எங்கெங்கோ யோசனை செய்தது. அவன் அருகில் இருந்த விஷ்ணு ஆதியை பார்க்க ஆதியின் மனத்தை புரிந்தவன் போல் ஆறுதலாக கையை பிடித்து அழுத்தியவனை பார்த்தவன் ஒன்றும் சொல்லாமல் புன்னகைத்தான். பிறகு அவர்கள் உள்ளே நுழைய ஒவ்வொன்றும் வேலை பாதியில் நிறுத்தியதில் முழுமையடையாமல் இருந்தன. இவர்கள் போவதற்கும், பாம் ஸ்குவாட் வருவதற்கும் சரியாக இருந்தது. இவ்வளவு பொருட்களில் எவ்வாறு பாமை கண்டுபிடிப்பது என மலைத்தான். ஏனெனில் எந்த பொருளில் அவன் பாம் வைத்தான் என ஒன்றும் தெரியவில்லை. எல்லாரும் ஒவ்வொரு இடமாக பிரிந்து சென்று தேடினர். ஆதியும், விஷ்ணுவும் முன் பக்கம் தேட அவர்கள் பின்னால் இருந்த இடங்களில் தேடினார்கள். “ஆதி பாம் எவ்வளவு நேரத்துக்குள்ள வெடிக்கும்னு ஏதாவது சொன்னானா?” “ஆமாடா. அரை மணி நேரத்துக்குள்ள வெடிக்கும்னு சொன்னான்“ ஒவ்வொரு இடத்திலும் அங்குலம் அங்குலமாக அலச நேரம் போய் கொண்டிருந்தது. “ஆதி டைம் ஆகிட்டே இருக்குடா“ “டேய் என்னடா இங்க எங்கயுமே இருக்க மாதிரி தெரில“ ஆதிக்கு சட்டென்று ஏதோ தோன்ற வெடிகுண்டு நிபுணர்களை ஓடினான். “சார் அங்க நிறைய ஸ்கேன்னர்ஸ் இருக்கு. ப்ளீஸ் செக். வழக்கமா இங்க இருக்காது” என சொல்ல அங்கே வந்து அவர்கள்  ஒவ்வொன்றாக செக் செய்ய அவற்றில் ஒரு இடத்தில் சவுண்ட் வந்தது. “ஓ மை காட்… இதுல தான் இருக்கும் போல“ “வெயிட் சார். டிஃபியூஸ் பண்ணிடலாம்” என்று அதனை திறந்து செயலிழக்க வைத்தனர். ஆதி நிம்மதியுடன் விஷ்ணுவை பார்த்து புன்னகைக்க விஷ்ணுவும் புன்னகைத்தான். அவர்களுடன் வந்த காவல் அதிகாரி “சார் இந்த விஷயத்தில யார் மேலமாவது சந்தேகம் இருக்கா?”

அத்தியாயம் 26 Read More »

அத்தியாயம்25

அதிதேவும், விஷ்ணுவும் அப்போது கல்லூரியில் படித்து கொண்டிருந்தனர். அதிதேவ் எப்போதும் போல அமைதியாக இருக்க விஷ்ணு அவனுக்கு நேரெதிராக இருந்தான். புது இடம், புது கல்லூரி என அவன் தனது படிப்பு நினைவாகிய சந்தோஷத்தில் மிதந்தான். ஒரு நாள் அதிதேவ், சரண், நித்திஷ், விஷ்ணு, சந்தோஷ் அனைவரும் மரத்தடியில் அமர்ந்து பேசி கொண்டிருக்க அப்போது அவர்களுக்கு அருகில் இருந்த மரத்தின் அடியில் பேச்சு சத்தம் கேட்டு  அதிதேவ் பார்த்த போது அங்கே வினித் பேச பேச அந்த பெண் அழுது கொண்டிருந்தாள். “டேய் அது விசாலி தான?” என அதிதேவ் அதிர்ந்து போய் கேட்க “ஆமாடா“ “இவன்கிட்ட என்னடா பேசிட்டு இருக்கா?. அவ முகமே சரியில்ல” என சொன்னவன் உடனே அவர்களை நோக்கி சென்றான். அங்கே வினித்தும் விசாலியும் பேசி கொண்டிருந்தனர். “விசாலி என்னாச்சு?. ஏன் அழற?” என அதிதேவ் அவளிடம் விசாரிக்க “டேய் நாங்க பேசிட்டு இருக்கோம் இல்ல. நீ என்னடா நடுவுல வர?” என வினித் கோபமாக கத்த அவனை முறைத்தவன் “விசாலி என்ன பிரச்ன?” என வினித்தை கண்டு கொள்ளாமல் அதிதேவ் இறுக்கமான குரலில் கேட்டான். “இவன் என்கிட்ட தப்பா பிஹேவ் பண்ண டிரை பண்றான் ஆதி. நான் எவ்ளோ சொன்னாலும் பின்னாடியே வந்து டார்ச்சர் பண்றான்” என அவள் இன்னும் அழுக “நீ போ. இவன நான் பாத்துக்கறேன்” என்று சொல்லிய ஆதி விசாலியை அனுப்ப “ஏய் நில்லுடி. நான் உன்ன போக சொல்லல” என வினித் அதிகாரம் செய்ய அவளை கண்களால் போகும்படி சைகை செய்தவன் அடுத்த நொடி அவன் முகத்தில் குத்தினான். இதை சற்றும் எதிர்பாராத வினித் ஒரு நொடி திடுக்கிட்டவன் அடுத்த விநாடி அவனும் அடிக்க வர அதை எதிர்பார்த்திருந்த ஆதி விலகி கொள்ள அவன் கீழே விழ ஆதியின் நண்பர்கள் கூட்டம் கேலியாய் அவனை பார்த்து சிரிக்க அதில் ஆத்திரம் கொண்டவன் ஆதியை எட்டி உதைத்தான். இவர்கள் கல்லூரி வளாகத்தில் ஒருவரையொருவர் அடித்து கொண்டதால் இவர்கள் சண்டையில் கூட்டம் கூடி இந்த பிரச்சனை பிரின்சிபலை சென்றடைந்தது. அவர் இரண்டு பேரையும் கூப்பிட்டு விசாரித்தார். “என்ன பிரச்ன 2 பேருக்கும்?. நீங்க என்ன ரௌடிகளா?. இப்படி சண்ட போடறீங்க?. டிஸிப்ளின் வேணாம்?” என அவர் திட்ட இருவரும் அமைதியாய் இருந்தார்கள். “வினித் ஏற்கனவே நீ சரியில்ல. லாஸ்ட் ஒன் இயர்ல உன் ஸ்டடீஸூம் சரி, உன் பிஹேவியர் எதும் கரெக்டா இல்ல?. நீ படிக்க வந்தியா?. என்ன நினச்சிட்டு இருக்க?” என்று திட்டியவர் ஆதியை பார்த்தபடி “உனக்கு என்னாச்சு அதிதேவ்?. நீயும் ஏன் இப்டி பிஹேவ் பண்ற?” என கேட்க இருவரும் அமைதியாக இருந்தனர். அவர்கள் எவ்வளவு திட்டியும் இருவரும் வாயை திறக்கவில்லை. அதிதேவ் விசாலியை மனதில் வைத்து ஏதும் கூறாமல் இருக்க வினித்தோ இவனை எப்படி பழி வாங்குவது என சிந்தித்து கொண்டிருந்தான். இவர்கள் இரண்டு பேரும் அமைதியாய் இருந்ததை கவனித்தவர் “யூ போத் ஆர் சஸ்பெண்ட் ஒன் வீக்”

அத்தியாயம்25 Read More »

You cannot copy content of this page

error: Content copy warning!!