April 2026

அத்தியாயம் 24

அதிதேவும், விஷ்ணுவும் போன கார் விபத்துக்குள்ளானதை கேட்டு யாழினியும், மித்ராவும் பதறியபடி மருத்துவமனைக்கு சென்றார்கள். யாழினி உள்ளே நுழையும் போது அதிதேவ் கண்களை மூடி படுத்திருக்க யாழினி பதறியபடி வந்து அவன் கைகளை பற்றி கொண்டாள். “ஆதி என்னாச்சுடா?. கண்ண தொறந்து பாரேன்” என கதறியபடி அவனை உலுக்க படுத்திருந்தவன் கைகளோ அருகிலிருந்தவளை மெதுவாக அணைத்து கொண்டது. அவளை இறுக அணைத்தவன் யாழினியின் கண்களில் வழிந்த கண்ணீரை ஒற்றி எடுத்தான். அதில் ஒரு நிமிடம் சிலை போல் இருந்தவள் அடுத்த நிமிடம் அவனை காற்று கூட புகாத வண்ணம் இறுக அணைத்துக் கொண்டு கண்ணீர் வடித்தாள். “பேபி ஒன்னும் இல்லடா. கூல்” என அவள் முதுகை வருடி ஆறுதல்படுத்த அவளுடைய அழுகை சிறிது சிறிதாக குறைந்தது. “ஒண்ணுமே இல்லேனா பின்ன ஏன்டா ஹாஸ்பிடல் வந்தே?. நியூஸ் கேட்டதுல இருந்து உயிரே இல்ல தெரியுமா?” என அவள் உச்சி முதல் பாதம் வரை அவனை ஆராய அவள் நெற்றியில் மென்மையாக முத்தமிட்டவன் “எல்லாம் காரணமாத் தான் பேபி” என்றவன் “விஷ்ணு ரெஸ்ட்டாரான்ட் போலாம்னு சொன்னானு வண்டிய திருப்பினேன். அப்பவே ஆப்போசிட்ல ஒரு லாரி ஃபாஸ்டா வந்தது. ஏன் இவ்ளோ ஃபாஸ்டா வருதுனு யோசிச்சா நாங்க இறங்கினதுக்கப்புறம் கார அவன் இடிச்சான். ஆக்சுவலி அப்போ தான் இறங்கினதால லைட் ஆன்ல இருந்ததுல உள்ளே இருக்கோம்னு நினச்சிட்டான் போல” என்றவன் “ஆனா எனக்கு ஒருத்தன் மேல டவுட்டா இருக்குது பேபி” என்று சொல்ல “யார சொல்ற?” “காளியப்பன் தான்” என்றவன் “அவன பத்தி நம்ம பத்திரிக்கைல ஒரு நியூஸ் போட சொல்லிருக்கேன்” என்றவனை அதிர்ச்சியாக பார்த்தாள். “நம்ம பத்திரிக்கையா?” என கேட்க “பேபி தேவன் குரல் நம்ம பத்திரிக்கை தான்டா. அப்றம் உனக்கு இன்னெரு வேல” என்றவன் “நான் உனக்கொரு ஆடியோ ஃபைல் சென்ட் பண்றேன். அத நெட்ல போட்டு விடு. ‘அமைச்சரின் கொலை மிரட்டல்னு‘ தலைப்பு போட்டு” என சொல்ல அவள் மிரட்சியாய் ஆதியை பார்த்தாள். “என்ன ஆதி சொல்ற?” என யாழினி திடுக்கிட்டு கேட்க அவள் விழிகளில் தெரிந்த பயத்தில் அவளை இறுக அணைத்தான். “கூல் பேபி. நான் இத பாத்துக்கறேன்” என சொல்லவும் சரி என்றவள் “நான் அண்ணாவ போய் பாத்துட்டு வரேன்” என யாழினி எழ அவள் கையை பற்றினான். அவள் என்ன என்பது போல் பார்க்க “கொஞ்ச நேரம் என் கூடவே இரு பேபி. அந்த லாரி என் மேல மோதி இருந்தா… நான் திரும்பி உன்ன பாத்திருக்க முடியுமா?. என் பக்கத்துலயே இரு பேபி” என கண்களில் ஏக்கத்துடன் கேட்க யாழினியோ அவனை அறைந்திருந்தாள். “ஏன்டா இப்படி தான் பேசுவியா?. நீ நல்லா இருக்கேனு சந்தோஷப்பட்டா நெகட்டிவா பேசறே?. இப்டி பேசினா என்கிட்ட பேசாத” என அவள் முறுக்கி கொள்ள “சாரி பேபி.ப்ளீஸ்” என அவன் பாவமாய் பார்க்க அந்த கண்களில் தெரிந்த ஏக்கத்தில் முத்தம் கொடுத்தாள். அதனை கண் மூடி அனுபவித்தவன் அப்படியே அவளை இறுக அணைத்து கொண்டான்.

அத்தியாயம் 24 Read More »

அத்தியாயம் 23

சில்லென்று குளிர் காற்று வீச கடற்கரை மணலில் அதிதேவும், யாழினியும் அருகருகே அமர்ந்திருக்க அவர்களுக்கு எதிரில் சின்ன குழந்தை ஒன்று மண் வீடு கட்டி கொண்டிருக்க அதனை யாழினி ரசித்து கொண்டிருக்க ஆதியோ யாழினியை உச்சி முதல் பாதம் வரை பார்வையால் வருடிக் கொண்டிருந்தான். “பேபி” என்று மென்மையான குரலில் அழைக்க அவனை பார்த்தவள் ” என்ன ஆதி?” என கேட்க “பேபி நீ எப்பவும் என் கூட இருப்பியா?” என ஏக்கக் குரலில் கேட்க “நான் உன்கூட தான இப்பவும் இருக்கேன் அதி டார்லிங்” என அவள் விளையாட்டாய் கேட்க “நீ எங்க பேபி இருக்க?. ஒரு நாள் மட்டும் என் கூட இருந்த. அப்புறம் நான் உன்ன கண்டுபிடிக்காம எவ்ளோ கஷ்டப்பட்டேன் தெரியுமா?” என ஆதி கண்களில் வலியுடன் கேட்க “என் அதி பேபிக்கு என்னாச்சு?. நான் உன்ன விட்டு எங்கேயாவது போவேனா?” என மென்மையாக கூறிய யாழினி அவன் நெற்றியில் முத்தமிட “ஐ லவ் யூ பேபி” என இறுக அணைத்தான். ஆதி “ஐ லவ் யூ பேபி” என பக்கத்தில் படுத்திருந்த விஷ்ணுவை இறுக அணைக்க விஷ்ணுவின் கத்தலில் ஆதி ஒன்றும் புரியாமல் விழித்தான். “டேய் நீ எங்கடா இங்க?. யாழ் பேபி இங்க தான இருந்தா?” என கேள்வி கேட்க விஷ்ணு அவனை ஒரு மாதிரி பார்த்தான். “என்னடா?. ஏன் இப்படி பாக்கற?” என புரியாமல் ஆதி கேட்க “மச்சி என்னடா பண்ணிட்டு இருக்க?. அவனாடா நீ?” என விஷ்ணு கலாய்க்க “மச்சி” என ஆதி கேள்வியாய் பார்க்க “ஏன்டா என் தங்கச்சி கிட்ட பேசணும்னா போன் பண்ணி பேசுடா. நடு ராத்திரில தோஸ்தனா பண்றியா நீ?. உன் தங்கச்சி கிட்ட சொல்றேன்” என புகார் வாசிக்க “டேய் அப்டிலா சொல்லி என் இமேஜ் டேமேஜ் பண்ணிறாதடா. நானே யாழினி கிட்ட எப்டி லவ் சொல்றதுனு திணறிட்டு இருக்கேன்” என சொல்ல “அதுக்கு ஏன்டா என் தூக்கத்த கெடுத்த?. இப்போது மித்து கிட்ட கெஞ்சி, கொஞ்சி பக்கத்துல வந்தா. பாவி. கரெக்டானா டைம்ல எழுப்பி விட்டான்” என புலம்ப இப்போது ஆதி விழுந்து விழுந்து சிரித்தான். “சிரிக்காதடா. தூக்கத்தை கெடுத்துட்டு… போடா” என்று விஷ்ணு போர்வையை போர்த்தி கொண்டு தூங்க ஆதி தீவிரமான யோசனையில் ஆழ்ந்தான்.                       ************ ஆதியின் டிமார்ட் கம்பெனி அவனுடைய கரெக்டான டெலிவரியால் பிரபலமடைந்தது. குறிப்பிட்ட நாட்களில் அவன் கம்பெனி நல்ல பெயரை பெற்றது. யாழினியின் கண்கள் அங்கும் இங்கும் தீவிரமாக கணிப்பொறியில் இயங்கி கொண்டிருக்க தீவிரமாக வேலை செய்து கொண்டிருந்தவன் ஏதேச்சையாக பார்க்க அந்த கரு விழிகளின் போக்கில் அவன் தடுமாறி கொண்டிருக்க சரியாக விஷ்ணு உள்ளே வர அவன் வந்தது கூட புரியாமல் ஆதி யாழினியை சிலை போல பார்த்துக் கொண்டிருந்தான். “மச்சி” என விஷ்ணு கூப்பிட ஆதியோ அவனை கண்டு கொள்ளவில்லை. அதை கவனித்த விஷ்ணு “ஆதி” என உலுக்க அதிதேவ் கனவில் இருந்து விழிப்பவன் போல் விழித்தான்.

அத்தியாயம் 23 Read More »

அத்தியாயம் 22

சந்தோஷிடம் பேச ஆதியும், விஷ்ணுவும் வர அங்கோ எதிர்பாராத விதமாக யாழினியை பார்த்த ஆதி அவளிடம் பேசி கொண்டிருக்கும்போது யாழினியின் முகம் அதிர்ச்சியில் உறைந்தது. “பேபி என்னாச்சுடா?” என்று ஆதி பதற அவள் அவனுக்கு பின்புறமாக கை காட்டினாள். அங்கே கார்த்திக் கத்தியுடன் வந்து கொண்டிருந்தவன் ஆதி திடீரென்று திரும்பியதில் அதிர்ச்சியில் சிலை போல நின்றான். “ஹாய் மிஸ்டர் கார்த்திக் என்ன இந்த பக்கம்?” என்று விசாரித்தவன் “ஓ… கைல கத்திலா வெச்சிருப்பீங்க போல?” என்று பேசி கொண்டே அருகில் சென்றவன் அவன் எதிர்பார்க்காத ஓர் நொடியில் அவனை ஓங்கி அறைந்தான். அதில் கத்தி தூரப் போய் விழுந்தது. “ஏன்டா போன்னா போதுனு விட்டு வெச்சா நீ என் மேலயே கை வைப்பியாடா?” என்று பேசி கொண்டே திரும்ப இன்னொரு முறை அறைந்தான். ஆதியின் செயலில் உள்ளுக்குள் நடுநடுங்கி கொண்டிருந்த கார்த்தி ஒன்றும் செய்ய முடியாமல் அடி வாங்கி கொண்டிருந்தான். “உன்ன யாருடா அனுப்பி வெச்சது?” என விசாரிக்க யாழினியோ முதலில் இருந்த பதட்டத்தில் யாரோ என நினைத்தவள் கார்த்திக்கை பார்த்ததும் வந்த கோபத்தில் அவள் பங்குக்கு 4 அறை அறைந்தாள். “பேபி கூல்டா. விடு. நான் பாத்துக்கறேன்” என ஆதி சமாதானப்படுத்த “இல்ல ஆதி. இவன் பண்ணது எதுமே சரியில்ல. தேவையில்லாம என் மேல பழி போட்டான். இப்போ உங்களயே கொல்ல வரான்” என்று கூறி கொண்டே ஒரு கராத்தே அடி கொடுக்க கார்த்தி தள்ளி போய் விழ ஆதியோ வாய் பிளந்து நின்றான். ‘வாவ்… என் பேபிக்கு கராத்தே கூட தெரியுமா?’ என பிரமிக்க இவர்கள் சத்தம் கேட்டு உள்ளே இருந்தவர்கள் வந்தார்கள். “மச்சான் என்னாச்சுடா?” என விஷ்ணு கேட்க “சார் என்ன கொல்ல வந்தாருடா” என கார்த்திக்கை காட்ட அவன் பங்குக்கு அவனும் அடிக்க “டேய் இவன் தான்டா உன் தங்கச்சி மேல பழி போட்டது” என சந்தோஷிடம் சொல்ல ஆக மொத்தம் எல்லாரும் அறைந்ததில் குற்றுயிரும் கொலையுயிருமாக கிடந்தான். “மச்சி இவன போலீஸ்ல ஹேன்ட் ஓவர் பண்ணனும். நீங்க போங்க” என ஆதி சொல்ல “நீ போக வேண்டாம் மச்சி. நான் பாத்துக்கறேன்” என சொன்னவன் கார்த்திக்கை இழுத்து சென்றான். “பேபி இதனால தான் சொல்றேன். ப்ளீஸ். கொஞ்சம் கவனமா இரு” என ஆதி கவலையோடு கூற “நீ இருக்கப்ப நான் ஏன் பயப்படணும்?” என யாழினி ஒற்றை புருவம் உயர்த்தி கேட்க “பேபி” என்று துள்ளலான குரலில் கூறினான். “மச்சான் நான் இங்க தான்டா இருக்கேன்” என சந்தோஷ் சொல்ல “டேய் நீ இன்னும் போகலயா?” என ஆதி கேட்க சந்தோஷ்க்கு பக்கத்தில் மித்ரா நிற்பதை பார்த்தவன் மித்ராவை அருகில் அழைத்தான். “மித்துமா எங்க போறதா இருந்தாலும் சந்தோஷ் கூட போங்க. சரியா?” என்று வாஞ்சையுடன் கூறியவன் “யாழினி உனக்கும் தான் சொல்றேன்”

அத்தியாயம் 22 Read More »

அத்தியாயம் 21

அடுத்த நாள் மருத்துவமனையில் உடல் முழுக்க கட்டுடன் வினித் படுத்திருந்தான். அவன் பக்கத்தில் காளியப்பன் கொலைவெறியில் இருக்க அவன் அம்மாவோ கண்களில் கண்ணீருடன் அமர்ந்திருந்தார். நேற்று இரவு ஆதி வினித்தை அடித்ததை கேள்விப்பட்டதும் அவருக்கு ஆதியை கொல்ல வேண்டும் என்ற வெறி இருந்தது. முதலில் வினித்தின் நிலையை பார்த்து துடித்தவர் உடனடியாக அவனை மருத்துவமனையில் சேர்த்தார். ஆதியின் கை வண்ணத்தில் அவன் உடல் முழுவதும் கட்டு போடப்பட்டிருந்தது. அவர் விசாரித்த வரையில் ஆதி அவனை தனியாக ஒரு இடத்திற்கு இழுத்து சென்று அடித்ததாக சொன்னார்கள். இதை வைத்தே ஆதியை அடித்து நொறுக்கலாம் என்ற முடிவில் இருந்தார். அனைத்து பத்திரிக்கையையும் மருத்துவமனைக்கு வரவழைத்தவர் “அதிதேவ் முன் பகை காரணமாக தனது மகனை கொலை செய்ய முயற்சி செய்தான்” என்று கண்ணீருடன் அறிக்கை விட்டார். ஏதேச்சையாக யூடிப்பில் இதனை ஆதியும், விஷ்ணுவும் நேரடி ஒளிபரப்பில் பார்த்திருந்தனர். “மச்சி என்ன இது?. இந்த ஆள் இப்டி பழி போடறான்?” என்று அதிர்ச்சியுடன் கேட்க “மச்சி நம்ம நேத்து பார்ட்டி கொடுத்தப்ப பிரஸ்காரன் எவனோ நான் அடிச்சது போட்டோ எடுத்திருக்கான்” என்று விளக்கம் சொல்லியவன் “தேவன் குரல் பத்திரிக்கை பாத்தியா மச்சி?” “இல்லயே” என்று சொல்லியவுடன் தனது அருகில் இருந்த பத்திரிக்கையை எடுத்து நீட்டினான். அதில் வினித் ஆதியை அடிப்பது போல் போட்டோ எடுக்கப்பட்டிருந்தது. அதை பார்த்த விஷ்ணு திடுக்கிட்டான். “மச்சி இது எப்படா நடந்தது?” என்றவனை பார்த்து கண் சிமிட்டியவன் “ஷாக்க குற மச்சி. இப்போ இன்னொன்னு நடக்க போகுது” என்றபடி மடிக்கணியை பார்த்தான். “ஆதி எதுனாலும் சொல்லிட்டு செய்டா” என்று அவன் சொல்லிக் கொண்டு இருக்க டிவியில் இருந்த நிருபர் ஒருவர் “சார் நேத்து வினித் அதிதேவ் சார அடிக்க டிரை பண்ணாங்க. என்கிட்ட ஆதாரம் இருக்கு” என்று போட்டோ காட்டினான். இதை எதிர்பார்க்காத காளியப்பன் அதிர்ச்சி அடைந்தார். அந்த போட்டோவால் அங்கே சலசலப்பு ஏற்பட்டது. பின் சில நிமிடங்களில் சுதாரித்தவர் “இது எதிர்க்கட்சிகளின் சதி” என்று பேச்சை மாற்றினார். ஆதி அதை கேட்டு விழுந்து விழுந்து சிரிக்க விஷ்ணு புரியாமல் பார்த்தான். “டேய் என்னடா நடக்குது?” என்று வடிவேலு மாடுலேசனில் விஷ்ணு கேட்க “வெயிட் அண்ட் வாட்ச் மச்சி” என்று கண்ணடித்தான். “இனி அவன் எது பண்ண டிரை பண்ணாலும் இப்டி தான் நடக்கும்” என்று இறுகிய குரலில் கூறியவன் மேற்கொண்டு வேலைகளை கவனித்தான். விஷ்ணு யோசனையாக நிற்க “போடா. நெக்ஸ்ட் என்னென்ன திங்க்ஸ் நம்ம ஆன்லைன்ல கொண்டு வரணும்னு பாருடா. நான் அதுக்குள்ள ஃபைல்ஸ் பாத்துட்டு வந்தறேன். டிஸ்கஸ் பண்ணலாம்” என்று சொல்ல விஷ்ணு தலையாட்டியபடியே வெளியே சென்றான். சிறிது நேரம் வேலை பார்த்து கொண்டிருந்தவனுக்கு யாழினியின் நியாபகம் வந்தது. அவளின் நினைவில் உள்ளுக்குள் உற்சாக ஊற்று ஏற்படுவதை உணர்ந்தவன் அவனை அறியாமல் யாழினிக்கு போன் செய்தான். “ஹலோ” என்ற யாழினியின் குரலில் உலகை மறந்தவன் பின் சுதாரித்து “பேபி” என்று குரலில் காதல் பொங்க சொல்ல அவளோ அமைதியானாள். “பேபி லைன்ல இருக்கியா?” என்று பதற

அத்தியாயம் 21 Read More »

You cannot copy content of this page

error: Content copy warning!!