May 2026

அத்தியாயம் 35

அன்று இரவு பார்கவிக்காக பாலை காய்ச்சிக் கொண்டிருந்தாள் நிலா.. கால் வீக்கம் அதிகமாக இருந்ததால், அவளால் நிற்க முடியாமல் ஒரு நிமிடம் சுவரைப் பிடித்துக் கொண்டாள்.  அப்போது அங்கே வந்த பாற்கரன், அவளை ஒரு நிமிடம் முறைத்துப் பார்த்தான். “ஏன் இன்னும் தூங்காம இங்க நிக்கிற? வேலைக்காரங்க இருக்காங்கல்ல? அவுங்கக்கிட்ட என்ன வேணும்னு சொன்னா?.. அவுங்களே செஞ்சு தருவாங்க..” என்று அவன் குரலில் வழக்கமான அதட்டல் இருந்தது. “இல்ல.. அக்காவுக்குப் பால் காய்ச்சிட்டு…” என்று நிலா இழுக்க, […]

அத்தியாயம் 35 Read More »

அத்தியாயம் 34

​பார்கவி போனை அணைத்த வேகம், சூரியாவின் இதயத் துடிப்பை ஒரு நிமிடம் நிறுத்திவிட்டது. அவள் கண்களில் தெரிந்த அந்தத் தீர்க்கமான பார்வை, இதுவரை அவன் பார்த்த பார்கவியோ அல்லது செம்பாவோ இல்லை..  ஏன் வக்கீல் வீட்டிற்கு பார்கவி சென்றால் என்பது கூட சூரியாவிற்கு தெரியாது..   வண்டி வீட்டை அடைந்ததும், சூரியாவிடம் ஒரு வார்த்தை கூடப் பேசாமல் விறுவிறுவென உள்ளே சென்றாள். ​ அங்கே, சோபாவில் அமர்ந்திருந்த பாற்கரன், கையில் போனுடன் நிலைகுலைந்து போயிருந்தான்.  ஆம்.. அவளிடம் அனைத்தையும்

அத்தியாயம் 34 Read More »

அத்தியாயம் 33 

ஜன்னல் கம்பிகளைப் பிடித்திருந்த பார்கவியின் விரல்கள் இறுகின.  வெளியே நிலவொளியின் மெல்லிய வெளிச்சத்தில், தோட்டத்துச் சாலையில் நிழலாடிக் கொண்டிருந்த அந்த உருவத்தை அவள் கண்கள் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தன. அங்கே, எவ்விதச் சலனமும் இன்றி, தன் தோளில் குழந்தையைச் சுமந்தபடி உலவிக் கொண்டிருந்தான் சூரியா.  அவனைக் கண்டாலே அவளுக்குள் ஆயிரம் மின்னல்கள் ஒரே நேரத்தில் வெட்டுவதைப் போன்ற உணர்வு. நரநரவெனப் பல்லைக் கடித்தாள்.  இந்தக் கோபம் அவன் மீதா? அல்லது இத்தனை குழப்பங்களுக்கு மத்தியிலும், அவனைக் கண்டதும்

அத்தியாயம் 33  Read More »

அத்தியாயம் 32

வராண்டாவில் அமர்ந்து எதையோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த நிலா, காலடி சத்தம் கேட்டதும் திடுக்கிட்டு நிமிர்ந்தாள்.  வந்திருப்பது பாற்கரன் என்று தெரிந்ததும், அவளது முகம் கல்லாய் இறுகியது. அவனது முகம் பார்ப்பது கூட அவளுக்குப் பிடிக்கவில்லை.  சட்டென்று எழுந்து உள்ளே செல்ல முயன்றாள். “நிலா… ப்ளீஸ்… ஒரு நிமிஷம் நான் சொல்றதைக் கேளு,”  பாற்கரனின் குரலில் இருந்த அந்த நடுக்கம் நிலாவின் கால்களை ஒரு கணம் தடுத்து நிறுத்தியது.  அந்த அதிகாரமான குரலில் இன்று ஏதோ ஒரு

அத்தியாயம் 32 Read More »

அத்தியாயம் 31 

பாற்கரனின் அந்த அறை மருத்துவமனை வராண்டாவையே அதிர வைத்தது. சூர்யா நிலைதடுமாறிப் போய் தன் கன்னத்தைப் பிடித்துக்கொண்டு அதிர்ச்சியுடன் நின்றான்..  “என்னடா சொன்ன? என் மனைவியா சந்தோஷமா இருக்கட்டும்னு சொல்றியா? அறிவு இருக்காடா உனக்கு?” பாற்கரன் ஆத்திரத்தில் சூர்யாவின் சட்டையைப் பிடித்து உலுக்கினான். “உன் பொண்டாட்டி உள்ள மயக்கத்துல கிடந்துட்டு, கனவுல கூட அவ புருஷனைத் தேடுறா. ‘மச்சான்… மச்சான்…’னு அவ வாய் உன் பெயரைச் சொல்லத் துடிக்குது. ஆனா நீ என்னடான்னா, ஏதோ தியாகி மாதிரி அவளை

அத்தியாயம் 31  Read More »

அத்தியாயம் 30 

பாற்கரன் புயலென வெளியேறிய அந்தத் திசையையே நிலா வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்..  சில நிமிடங்களுக்கு முன்பு வரை அந்த வீட்டில் நிலவிய அந்தச் சந்தோஷத் துளிகள், இப்போது தரை தட்டிய கண்ணாடியாய் சிதறிக் கிடந்தன. “பார்கவி மயங்கிட்டா…” அவன் சொன்ன அந்த ஒரு வார்த்தை, நிலாவின் நெஞ்சில் ஓராயிரம் ஈட்டிகளாய் இறங்கியது.  அக்காவின் மீது அவளுக்குக் கோபமில்லை, ஆனால் அந்த ஒரு பெயர் வந்தாலே தன் கணவன் தன்னைப் பார்க்கக் கூடத் திரும்பாமல் ஓடுவது அவளைச் சுட்டெரித்தது.

அத்தியாயம் 30  Read More »

அத்தியாயம் 29 

பார்கவி ஜன்னலோரம் நின்று வெறித்து வெளியையே பார்த்துக் கொண்டிருந்தாள்.  வானம் மேகமூட்டத்துடன் மந்தாரமாக இருந்தது, அது சரியாக அவளது மனநிலையைப் பிரதிபலிப்பது போலவே அவளுக்குத் தோன்றியது.  அவளது நெஞ்சுக்குள் இனம் புரியாத ஒரு பாரம், ஒரு வலி.  அது எதனால் என்று அவளால் துல்லியமாக உணர முடியவில்லையே தவிர, அதன் பாதிப்பு அவளை உருக்குலைத்துக் கொண்டிருந்தது. பாற்கரன்.. அவளது கரன்..  அவனது ஒவ்வொரு அசைவும், ஒவ்வொரு பார்வையும் அவளுக்கு இப்போது ஒரு புதிர் போலவே இருந்தது. முன்பெல்லாம்

அத்தியாயம் 29  Read More »

அத்தியாயம் 28

“இவன் எதுக்கு இந்த அன்டைம்ல திருடன் மாதிரி பதுங்கிப் பதுங்கி வந்திருக்கான்?..” என நினைத்தபடி, அங்கிருந்தபடியே அவனையே உற்றுப் பார்க்கத் தொடங்கினாள்.  பாற்கரனுக்கு, சமையலறையின் அடர்ந்த இருட்டுக்குள் மறைந்திருக்கும் நிலா கண்களுக்குத் தெரியவில்லை. அவன் பார்வை முழுவதும் நிலாவின் அறையை நோக்கியே இருந்தது. யாரும் விழித்துக் கொள்ளக் கூடாது என்பதற்காக, தனது ஷூக்களை வாசலிலேயே கழற்றி விட்டு, காலடி சத்தம் சற்றும் கேட்காதவாறு திருடனைப் போலத் தத்தித் தத்தி நடந்து, நிலாவின் அறையின் முன்பாக வந்து நின்றான்

அத்தியாயம் 28 Read More »

அத்தியாயம் 27

பாற்கரனுக்கு மூச்சடைத்துக் கொண்டு வந்தது.  நெஞ்சுக்குள் ஏதோ ஒரு பெரும் பாறையைத் தூக்கி வைத்தது போல ஒரு கனம் அழுத்தியது.  அறையின் ஒரு முனையிலிருந்து மறு முனைக்கு அமைதியின்றி குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தான். அவனது கண்கள் சிவந்திருந்தன, மூளைக்குள் ஆயிரம் சிந்தனைகள் சுழன்றடித்தன.  அவனது ஒரே இலக்கு இப்போது பார்கவி மட்டும்தான். எப்படியாவது, பார்கவியை சூரியாவுடன் சேர்த்து வைத்துவிட வேண்டும்.  அது ஒன்றே இப்போது அவனுக்கு இருக்கும் ஒரே வழி. டிவோர்ஸ் அப்ளை செய்ய வேண்டுமென்றால்,

அத்தியாயம் 27 Read More »

அத்தியாயம் 26 

காரின் ஜன்னல் வழியே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த நிலாவின் கண்களில் இருந்து கண்ணீர் அருவியெனக் கொட்டிக் கொண்டிருந்தது.  சாலை ஓரம் கடந்து செல்லும் மரங்களும், கட்டிடங்களும் மங்கலாகத் தெரிந்தன.  அவள் இதயம் மட்டும் காலத்தின் பின்னோக்கி ஓடிக் கொண்டிருந்தது.  அந்த ஒரு நாள்… அந்த ஒரே ஒரு கருப்பு நாள் மட்டும் அவள் வாழ்க்கையில் வராமல் இருந்திருந்தால், இன்று அவள் பாற்கரனைப் பிரிந்து அனாதையாய் அலைந்து கொண்டிருக்க மாட்டாள். விதி எவ்வளவு கொடூரமானது என்பதை அன்றுதான் நிலா

அத்தியாயம் 26  Read More »

You cannot copy content of this page

error: Content copy warning!!