May 2026

அத்தியாயம் 25 

பாற்கரனின் வாழ்க்கையில் காலச் சக்கரம் சுழன்று, அந்த ஆறு மாதங்களும் ஓடி மறைந்திருந்தன. பார்கவிக்கு அழகான பெண் குழந்தை பிறந்திருந்தது. வீடே கொண்டாட்டத்தில் இருக்க வேண்டிய சூழல் அது.  தொட்டிலில் படுத்துக்கொண்டு அந்தப் பிஞ்சு உயிர், ஒருமாத குழந்தை நன்றாக தூங்கிக் கொண்டிருந்தது..  பார்கவி உறங்கும் குழந்தையை தான் பார்த்துக் கொண்டிருந்தாள்..  “கரன்..” என்றாள் பார்கவி..  “ம்ம்.. சொல்லு..” என்றான்,  “நைட் எல்லாம் சோபாவுல படுத்தீயா?..”  “ம்ம்.. ஆமா..”  “ஏன், கட்டில்ல படுக்கலை நீ?..” என்ற கேள்வியில் […]

அத்தியாயம் 25  Read More »

அத்தியாயம் 24 

பாற்கரன் காரை சென்னை நோக்கிப் பறக்கவிட்டான். இருவர் மனதிலும் மணியரசி சொன்ன அந்த வார்த்தைகள் அனலாய் தகித்தன.  சண்முகம் – பாற்கரனின் தந்தை வேதாச்சலத்தின் நம்பிக்கைக்குரிய மேனேஜர். ஒரு மேனேஜர் எதற்காகக் குழந்தையைக் கடத்த வேண்டும்?  சென்னை, அடையாறில் இருந்த சண்முகத்தின் வீட்டின் முன்னால் கார் சீறிப்பாய்ந்து நின்றது.  சூரியா காரிலிருந்து இறங்கிய வேகத்தில் வீட்டின் கதவை நோக்கிச் சென்றான்.  கதவைத் தட்டக்கூட இல்லை.. தன் காலால் ஓங்கி ஒரு உதை விட்டான் சூரியா. ‘தடா’லெனக் கதவு பிளந்து

அத்தியாயம் 24  Read More »

அத்தியாயம் 23

“ஹேய்ய்ய்.. ஸ்டாப்.. ஸ்டாப்..” பாற்கரனின் அந்த திடீர் அழைப்பில் சூரியா சட்டென்று திரும்பினான். அவன் கண்களில் ஒருவித ஏளனமும் எரிச்சலும் கலந்திருந்தது. “என்ன?” என்று சூரியா ஒற்றைச் சொல்லில் கேட்க, பாற்கரன் தன் மனதிற்குள் இருந்த ஒரு குழப்பத்தை வெடித்தான்.  “அது எப்படி? எங்களுக்கு கல்யாணம் ஆனது உனக்குத் தெரியாம போச்சு? செம்பா தான் ஊருக்கெல்லாம் தண்டோரா போட்டுட்டு சுத்துனாளே?” சூரியா இப்போது பாற்கரனை ஏறிட்டு முறைத்தான். அந்தப் பார்வையில் ஒரு தெளிவு இருந்தது.  “ஏன்டா, வாய்ல

அத்தியாயம் 23 Read More »

அத்தியாயம் 22 

கல்லூரியின் அந்த மாலை நேரம், களைகட்டத்  தொடங்கியது..  வானம் இருண்டு, கருமேகங்கள் ஒன்றோடு ஒன்று மோதி பெரும் இரைச்சலை உருவாக்கிக் கொண்டிருந்தன. ஆனால், அந்த இரைச்சலையும் மீறி பார்கவியின் சிரிப்பொலி அந்த ஆடிட்டோரியம் முழுவதும் ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தது. ‘கலை இளவரசி’. மாநில அளவில் நடந்த மருத்துவக் கல்லூரி கலைத் திருவிழாவில், பரதநாட்டியத்திலும் சரி, மேற்கத்திய நடனத்திலும் சரி முதல் பரிசை தட்டிச் சென்றிருந்தாள் பார்கவி..  அவளது கால்கள் தரையில் படாமல் மின்னல் போலச் சுழன்றன.  அவள் ஒரு

அத்தியாயம் 22  Read More »

அத்தியாயம் 21 

பாற்கரன் அந்தச் சட்டையில் அவ்வளவு மிடுக்காக இருந்தான். அவனது உயரத்திற்கும் அந்த மெரூன் நிறத்திற்கும் ஒரு தேஜஸ் தெரிந்தது. “என்ன செம்பா… அப்படியே உறைஞ்சு போயிட்ட? நான் அவ்வளவு அழகா இருக்கேனா?” எனப் பாற்கரன் கிண்டலாகக் கேட்க, “உன்னை யாரு அழகுன்னு சொன்னா? டிரஸ் நல்லா இருக்குன்னு பார்த்தேன்…” எனப் பொய்யாகச் சினுங்கினாள். ஆனால், அவளது கண்கள் அவனிடமிருந்து அகல மறுத்தன. இருவரும் ஒன்றாகக் கிளம்பி அருகில் இருந்த புகழ்பெற்ற அம்மன் கோவிலுக்குச் சென்றனர். கோவில் திருவிழா

அத்தியாயம் 21  Read More »

அத்தியாயம் 20

“இல்லை.. இல்லை.. இது பொய்.. எனக்கு அக்கா எல்லாம் கிடையாது..” என்றாள் நிலா. அவளது குரலில் லேசான நடுக்கம் கலந்த பதட்டம்.  அடிமனதில் ஏதோ ஒன்று சரியில்லை என்று தோன்றினாலும், இத்தனை காலமாய் தான் மட்டுமே தன் பெற்றோருக்கு ஒரே வாரிசு என்ற பிம்பம் உடைவதை அவளால் ஏற்க முடியவில்லை. “இது பொய் இல்லை நிலா.. நிதர்சனமான உண்மை. உன் அப்பாவுக்கும், செம்பருத்திக்கும் எடுத்த டி.என்.ஏ ரிசல்ட் 99.9% பொருந்திப் போகுது..” பாற்கரன் நிதானமாகச் சொன்ன ஒவ்வொரு

அத்தியாயம் 20 Read More »

அத்தியாயம் 19 

வேதா மருத்துவமனையின் அந்தத் தனி அறை, நள்ளிரவின் நிசப்தத்தில் மூழ்கிக் கிடந்தது.  குளிர்சாதனப் பெட்டியின் மெல்லிய இரைச்சலும், அவ்வப்போது வெளியே கேட்கும் மருத்துவமனை அவசர ஊர்தியின் தூரத்து ஒலியும் மட்டுமே அந்த அறையின் மௌனத்தைக் கலைத்துக் கொண்டிருந்தன.  பால்கனியின் கதவைத் திறந்து வைத்துவிட்டு, கைகளை இறுகக் கட்டியபடி வெளியையே பார்த்துக் கொண்டிருந்தான் பாற்கரன். வெளியே தெரிந்த நிலவின் வெளிச்சம் அவனது முகத்தில் பாதி இருளையும் பாதி ஒளியையும் படரச் செய்திருந்தது.  அந்த இருள் அவனது குழப்பமான மனநிலைக்கும்,

அத்தியாயம் 19  Read More »

அத்தியாயம் 18 

வேதா மருத்துவமனையின் அந்தத் தலைமை மருத்துவர் அறை, ஏனோ அன்று வழக்கத்தை விட அதிகக் குளிர்ச்சியாக இருந்தது.  ஆனால், அந்த ஏசி குளிரையும் மீறி, பாற்கரனின் நெற்றியில் வியர்வை அரும்பியிருந்தது. வெளியே ஐசியூவில் ஒரு உயிர் ஊசலாடிக் கொண்டிருக்க, இங்கே அந்த நான்கு சுவர்களுக்குள் ஒரு மாபெரும் போராட்டம் அவன் மனதுக்குள் நடந்துக் கொண்டிருந்தது..  பாற்கரன் தன் இருக்கையில் சாய்ந்திருந்தான்.  அவன் கைகளில் இருந்த அந்த டிஎன்ஏ (DNA) பரிசோதனை அறிக்கை, அவனை மிகவும் குழப்பமாக்கியது..  அது

அத்தியாயம் 18  Read More »

அத்தியாயம் 17 

சென்னை வேதா மருத்துவமனையின் அந்தப் பிரம்மாண்டமான ஐசியூ வாயிலில், சூர்யா ஒரு நடைபிணமாக நின்றிருந்தான். செவிலியர்கள் பார்கவியை அவசரமாக உள்ளே தள்ளிக் கொண்டு சென்றனர்.  அந்தப் பரபரப்புக்கு நடுவே, ஒரு கம்பீரமான உருவம் வெள்ளை நிற கோட் அணிந்து, ஸ்டெதாஸ்கோப்பை கழுத்தில் மாட்டியபடி அவர்களை நோக்கி வந்தது. அவன்தான் டாக்டர் பாற்கரன். சூர்யா தன் கண்களைத் துடைத்துக் கொண்டு நிமிர்ந்து பார்த்தான். அந்த முகத்தைப் பார்த்த அடுத்த நொடி, சூர்யாவின் கால்கள் பின்னின. இதயம் ஒரு கணம்

அத்தியாயம் 17  Read More »

அத்தியாயம் 16

மாலை நேரத்து இளஞ்சிவப்பு வானம் அந்த வயல்வெளி எங்கும் ஒருவித அமைதியைப் பூசியிருந்தது.  பார்கவியின் முகத்தில் ஒரு வித அமைதிக் குடிக்கொண்டிருந்தது..  கல்யாணம் முடிந்த நாளில் இருந்து, தன்னை ஒரு நிமிடம் கூட விட்டுப் பிரியாத தன் மச்சானின் ஈர நினைவுகள் அவளை துரத்தியது..  சென்னை சென்று விட்டு வந்ததில் இருந்தே அவன் நடவடிக்கையில் பெரிய மாற்றம்..  சரியாக சாப்பிட மாட்டேங்குறான்.. எதிலும் கவனம் செலுத்த மறுக்கிறான்..  இவளின் அருகில் செல்லக்கூட பயப்படுகிறான்.. இவளாக நெருங்கி வந்தால்

அத்தியாயம் 16 Read More »

You cannot copy content of this page

error: Content copy warning!!