May 2026

அத்தியாயம் 15 

பாற்கரன் சொன்ன வார்த்தையில் அதிர்ந்து நின்றாள் நிலா..  இந்த வார்த்தை அந்த அறையில் இருந்த இருவருக்குமே ஒரு மின்னல் தாக்கத்தைப் போல இருந்தது. நிலாவுக்குத் தன் காதுகளையே நம்ப முடியவில்லை.  ‘மெமரி வாஷ்’ செய்து தன்னைக் கொல்லப் போவதாகச் சொன்னவனா இவன்? பூபதி திகைத்துப் போனார். “கல்யாணமா? நீங்க ஏற்கனவே கல்யாணம் ஆனவர்னு கேள்விப்பட்டேனே? உங்க பொண்டாட்டி…” “என் மனைவி செண்பா இப்போ உயிரோட இல்லை. நிலாவுக்குள்ள நான் செண்பாவைப் பார்க்கிறேன்னு நீங்க நினைக்கலாம். ஆனா, நிலா என் […]

அத்தியாயம் 15  Read More »

அத்தியாயம் 14 

பூபதி படுத்திருந்த அந்த வார்டிற்கு வெளியே இருந்த தாழ்வாரத்தில், தரை துடைத்துக் கொண்டிருந்த ஆயா முனியம்மாளும், வார்டு பாய் செல்வமும் மெதுவான குரலில் பேசிக்கொண்டிருந்தனர். “ஏலே செல்வம்… நீ கவனிச்சியா? அந்த நிலா பொண்ணு ஒரு வாரமா சரியாவே சாப்பிட மாட்டேங்குது. எப்பப்பாரு முகமெல்லாம் வெளுத்துப் போய், கையப் பிசைஞ்சுட்டே ஆப்ரேஷன் தியேட்டர் வாசல்ல நிக்குது,” என்றாள் முனியம்மாள், கையில் இருந்த மாப்பால் தரையைத் துடைத்தபடியே..  செல்வம் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு, “இருக்கும்க்கா… அவங்க அப்பா நிலைமை

அத்தியாயம் 14  Read More »

அத்தியாயம் 13

உடல் சோர்வில் படுத்திருந்த பார்கவிக்கு கண்கள் எதிரில் இருந்த சுவரையே வெறித்திருந்தன. இரண்டு நாட்களாக கணவனைக் காணாமல் பசலை நோய் வந்த பாவையாக தவித்துப் போனாள்..  எப்படியாவது?.. அவனைக் காண வேண்டும்.. அவனின் இறுகிய அணைப்புக்குள் தன்னை மறந்து இருக்க வேண்டும் என்ற தவிப்புடன் தான் இருந்தாள்..  “என்னட்டி, மோட்டுவளையத்தை பாத்து கனா கண்டுட்டு இருக்க?.. வெளியே வா.. வேலைக்கிடக்கு?..” என்ற ரத்னாவை சலிப்புடன் பார்த்தாள்..  “எனக்கு கொஞ்சம் முடியலை அத்தை. நான் ரெஸ்ட் எடுத்துட்டு அப்புறம்

அத்தியாயம் 13 Read More »

அத்தியாயம் 12

கண்களை மெல்ல விரித்தாள் நிலா..  இமைகளைத் திறப்பதே ஒரு யுகமாகத் தோன்றியது.  அடிவயிற்றில் சுருக் சுருக்கென்று வலித்துக் கொண்டிருந்தது..  அந்த வலியையும் மீறி, சுற்றும் முற்றும் பார்த்தவளுக்குச் சட்டென ஒரு நிமிடம் தான் எங்கிருக்கிறோம் என்பது புரியவில்லை.. மீண்டும் இருளுக்குள் தஞ்சம் புகக் கண்களை மூட முயன்றபோதுதான், நேற்றிரவின் அந்தப் பயங்கரமான காட்சிகள் ஒவ்வொன்றாக அவள் மனத்திரையில் ஓடின.  அந்தச் சுரங்கம்…  அந்த எலும்புக்கூடு…  அவனின் மூர்க்கமான அணைப்பு…  என அனைத்தும் நினைவுக்கு வர, நிலா திடுக்கிட்டு

அத்தியாயம் 12 Read More »

அத்தியாயம் 11 

“உங்க வீட்டுக்கா?.. நானா?..” என அதிர்ந்துக் கேட்டாள் பார்கவி..  “ஆமா ம்மா.. உன்னை எப்படியாவது அழைச்சிட்டுப் போக சொல்லியிருக்கான்?..” என்ற வெற்றிவேலை அதிர்ச்சியாக தான் பார்த்தாள் பார்கவி..  அவளுக்கு ரத்னாவை நினைத்துப் பயம்..  அவர் சுள் லென்று விழும் குணத்தைப் பார்த்து மிரட்சி தான் தோன்றியது..  “இல்லை மாமா. நான் என் வீட்டுலையே?..” என சொல்லி முடிக்கவில்லை..  “என்னத்துக்குங்கிறேன்?.. அந்த ஓட்டு வீட்டுல போய் என்னத்த கொடி நாட்டப் போறன்னு கேட்குறேன்?.. என்னடி?.. என் பையன் இல்லாத

அத்தியாயம் 11  Read More »

அத்தியாயம் 10 

நிலா மயங்கிச் சரிந்தபோது, பாற்கரனின் மந்தகாசப் புன்னகை இன்னும் விரிந்தது.  அவளை மெல்லத் தூக்கி, அந்த அலங்கரிக்கப்பட்ட பட்டு மெத்தையில் கிடத்தினான்.  மயக்கத்தில் இருந்த நிலாவை சுகமாக உள்வாங்கிக் கொண்டது அந்த பஞ்சுமெத்தை..  அவளது முகத்தில் விழுந்திருந்த கூந்தலை ஒதுக்கிவிட்டவன், அருகில் இருந்த அந்தச் சந்தனப் பெட்டியைப் பார்த்தான். “பார்த்தீயா செம்பா.. நீயே என்கிட்ட திரும்பி வந்துட்ட?.. நான் ஒவ்வொரு தடவையும் ரசிச்ச உன் அழகு முகம் இது தானே செண்பா?..” என்றவன்,  கட்டிலில் கிடந்தவளை அணுஅணுவாக

அத்தியாயம் 10  Read More »

அத்தியாயம் 9

வயல்வெளியில் நடந்து வந்துக் கொண்டிருந்தாள் பார்கவி.. இரண்டு நாட்களுக்கு முன்பாக ஒரு போன் வந்தது அவளின் ஆசை மச்சானுக்கு.. அதன்பிறகு எங்கே போனான் என்றே தெரியவில்லை..  போனிற்கு அழைத்துப் பார்த்தாள்.. ஸ்வீட்ச் ஆஃப் என வந்தது..  அவளுக்கு அழுகை, அழுகையாக வந்தது..  எங்கே போனான்?.. என்னிடம் ஒரு வார்த்தை சொல்லாமல் எங்கே சென்று விட்டான்?.. என தவித்துப் போனாள்..  அவனைத் தேடி தேடியே ஓய்ந்து போனது அவள் கண்கள்.. இப்பொழுதும் அவனைத் தேடி வயக்காட்டின் ஓரத்தில் இருந்த

அத்தியாயம் 9 Read More »

அத்தியாயம் 8 

ஒரு வாரத்திற்கு பின், வீட்டிற்குள் நுழைந்தாள் நிலா..  சுத்தமாக இருந்தாலும், ஒரு வித கெட்ட மணம் வீசியது..  “ப்சச்ச்.” என சலித்தவள், அத்தனை ஜன்னல்களையும் திறந்து வைத்தாள்..  அடுப்படியில் நுழைந்தாள்.. அன்று சமைத்த உணவு கெட்டுப் போய் இருந்தது..  அதையெல்லாம் ஒரு கவரில் எடுத்துப் போட்டவள், வீட்டைப் பெருக்கி.. மாப் போட ஆரம்பித்தாள்..  அப்பொழுது பார்த்து லேன்ட்லைன் போன் அடித்தது..  பூபதிக்கு ஒரு பழக்கம் உண்டு.. இன்றும் லேன்ட்லைன் போன் உபயோகிப்பார்..  அதில் அவர் நண்பர் வெற்றிவேலிடம்

அத்தியாயம் 8  Read More »

அத்தியாயம் 7

அறைக்குள் அங்குமிங்கும் உலாவிக் கொண்டிருந்தாள் நிலா..  அவளுக்கு ஒன்று மட்டும் புரியவில்லை..  தன்னை முழுதாக எடுத்துக் கொள்ளும் மனநிலையில் இருந்தவன், தன்னை கட்டிலில் இருந்து தள்ளிவிட்டதன் காரணம் என்ன?..  தன் உடலை தானே பேரம் பேசினான்.. இன்று அவன் கை வளைவுக்குள் நான் இருந்தும், ஏன் என்னை தள்ளி விட்டான்?.. அவனுக்கு நான் தேவையில்லையா?.. இல்லையே தெளிவாக சொன்னானே, உன் உடல் எனக்கு ஆறு மாதம் தேவை என்பதை..  படுக்கைக்கு அழைத்தது அவன் தானே..  ஒரு வேளை

அத்தியாயம் 7 Read More »

அத்தியாயம் 6 

தன் முன்னால் இருந்தவனின் ஆடையற்ற மேனியை தான் பார்க்க வேண்டுமா?.. என மெல்ல கண்களை கீழிறக்கியவளின் கண்கள் அதிர்ச்சியில் விரிந்தது..  ஆம்.. குட்டி ஷார்ட்ஸ் ஒன்றை அணிந்திருந்தான்..  “ஹப்பாஆஆ..” என நிம்மதியாக மூச்சு விட,  “கழட்டுறீயா?..” என்றானே பார்க்கலாம்..  “இல்லை. இல்லை.. நான் எதுவும் கழட்டலை..” என்றவளின் இடையோடு கரம் கொடுத்து தன்னை நோக்கி இழுத்தான்.. அவளை தன் முன் தேகத்தோடு அழுந்தப் பிடித்தவன்.. அப்படியே சரிந்து படுக்கையில் விழுந்தான்..  அவளுக்கு அச்சத்தில் படபடவென இமைகள் அடித்துக்

அத்தியாயம் 6  Read More »

You cannot copy content of this page

error: Content copy warning!!