அத்தியாயம் 5
அப்பார்ட்மெண்ட் வாசலில் நின்றிருந்தாள் நிலா.. அவளின் தோளின் மேல் கைப்போட்டு நின்றிருந்தான் அவன்.. பூபதியை நார்மல் வார்டிற்கு மாற்றவே 10 நாட்கள் ஆகும் என்று சொல்லிவிட்டான்.. அதற்கு அவரின் உடல்நிலையும் காரணமாகிப் போனது.. மூன்று பெரிய ஆப்ரேஷன்கள் அவரின் உடலில் நடந்திருக்கிறது.. அதைத் தவிர ஆங்காங்கே சிராய்ப்புகள், காயங்கள், வீக்கம் என அனைத்துமே இருந்தது.. அவரின் இரத்தஅழுத்தமும், ஒரு சமயம் ஏறி, மற்றொரு சமயம் இறங்கிக் கொண்டிருந்தது.. இந்நிலையில் யாரையும் உள்ளே அனுமதித்து, இன்பெக்ஷன் ஆகிவிட்டால் என்ன […]
