May 2026

தேடல் – 18

அனைவரும் உச்சக்கட்ட அதிர்ச்சியில் இருக்க, “திருட்டு நாயே… என் தங்கச்சியையே கடத்துவியா?” என்று கேட்டபடி மீண்டும் அடிக்க கை ஓங்கிய சித்தேஷ் கையை, “அண்ணா….” என்று அலறியபடி ஓடி வந்து பிடித்து இருந்தாள் அமிர்தா. அவனோ அஸ்வந்த் மீது இருந்த கோபத்தில் அவளை உதறி தள்ளிவிட்டு மீண்டும் அவன் தலையில் கம்பியை விளாசி இருக்க, சித்தேஷ் கையில் சுட்டு இருந்தான் அஸ்வந்த் காவலாளி சீருடையில் நின்றிருந்த ஒருவன். அவர்களே இப்போது தான் ஒரு முடிவுக்கு வந்து பிப்டி […]

தேடல் – 18 Read More »

தேடல் – 17

தன் கழுத்தில் தொங்கிய தாலியையும், எதிரில் புன்னகையோடு நின்றிருந்த அஸ்வந்தையும் தான் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தாள் அமிர்தா. அவளால் இன்னமும் நம்ப முடியவில்லை. அவளுக்கு கல்யாணம் ஆகிவிட்டது. அதுவும் அவள் மொத்த குடும்பமும் வசைபாடும் ஒருவனோடு. தன் அண்ணன் காவு வாங்க காத்திருக்கும் கயவனோடு. ‘வீட்டாரை எப்படி எதிர் கொள்வேன்?’ நினைக்கும் போதே தலை சுற்றியது அவளுக்கு. அவள் நிலை பற்றி சற்றும் கவலை படாதவனோ “இப்போ என் மாமனார் வீட்டுக்கு போகலாமா?” என்று கேட்க,

தேடல் – 17 Read More »

தேடல் – 16

அடுத்த நாள் காலை முதலே அவளுக்கு பாதி ஆதிவாசி வாழ்க்கையை காட்டியவன் இப்போது ஒரு மலையின் அடிவாரத்தில் கொண்டு வந்து நிறுத்தினான். அமிர்தாவோ அந்த மலையை அண்ணார்ந்து பார்த்துக் கொண்டே அவனை பார்க்க, அவனோ இடையில் கயிற்றைக் கட்டிக் கொண்டு மலை மேல் ஏற ஆயத்தமானன். எப்போதும் போல் அவன் செயலில் அதிசயத்துப் போனவள், ‘ஆள விடு டா சாமினு’ ஓட்டம் பிடிக்க ஆயத்தமாக, அவள் சோல்டர் பேக்கை பிடித்து இழுத்து அவள் இடையிலும் கயிற்றை கட்டி,

தேடல் – 16 Read More »

தேடல் – 15

சூரியன் மறைந்து முழு நிலா வான் பவனி வந்திருக்க, கூடவே மெல்லிய பனிப் பொழிவையும் கொண்டு வந்திருந்தது. மழை சாரலாக இல்லாமல் உடலை சில்லிட வைக்கும்  மெல்லிய பனிப் பொழிவு. அமிர்தா, அவள் காட்டில் மாட்டிக் கொண்டிருக்கும் கொடுமையை அண்ணனிடம் குற்றப்பத்திரிகை வாசித்து, உதவி கேட்டிட, சில கிலோ மீட்டர் தூரம் போனை தலைக்கு மேலே தூக்கி பிடித்து அலைந்து பார்த்து விட்டாள். காட்டில் பாண்டியன் குரூப்ஸா டவர் கட்டி வைத்துள்ளது, அவளுக்கு மட்டும் பக்காவாக சிக்னல்

தேடல் – 15 Read More »

தேடல் – 14

லேப்டாப்போடு கட்டிலில் மல்லாக்க விழுந்து கிடந்தவள் மருண்ட விழிகளோடு அவனை ஏறிட, அவனோ அர்னால்டுக்கு அண்ணன் போல் தான் திடகாத்திரமான வெற்று தேகத்தோடும், கூர் விழிகளோடும் அவளை கேள்வியாக பார்த்துக் கொண்டிருந்தான். தட்டு தடுமாறி எழுந்து நின்றவள், “உங்… உங்க திங்க்ஸ் எல்லாம் எடுத்து வச்சிட்டு இருந்தேன்” என்று நடுக்கதோடு சமாளிக்க முயன்றால். அவளை பார்த்தபடியே தன் சூட்கேஸில் இருந்து உடையை எடுத்து கொண்டவன், “சிட்” என்று சொல்லிக்கொண்டே அங்கிருந்த உடை மாற்றும் தடுப்பு பின்னால் சென்று

தேடல் – 14 Read More »

தேடல் – 13

சில மாதங்களுக்கு முன்பு… அமிர்தாவின் மொத்த குடும்பமும் ஹாலில் கூடி இருக்க, மொத்த குடும்பத்தையும் தாங்கும் அந்த குடும்பத்தின் ஆணிவேரான மருது பாண்டியோ ஆட்டம் கண்டு உறைந்து போய் இருந்தார். சில நாட்களாக அவர்கள் தொழில்  மந்தமாகவே சென்று கொண்டிருக்க, ஒரு தொழிலில் வரும் இலாபத்தை இன்னொரு தொழிலில் போட்டு சரிக் கட்டிக் கொண்டு வந்தவருக்கு இன்னும் அதிக பணத்தேவை வரவே, அரசுக்கு கணக்கு காட்டாமல் வெளிநாட்டு பாங்க்கில் பினாமி பெயரில் பதுக்கி வைத்திருந்த பணத்தை எடுக்க

தேடல் – 13 Read More »

தேடல் – 12

சமந்தாவிடம் அமிர்தாவை டிஸ்டர்ப் பண்ணாதே என்று விரட்டினாலும், அவள் நலனில் என்றும் அக்கறைக் கொண்ட அம்புஜம் மாமியோ, வழமை போல் அவளுக்கு அழைக்க, எப்போதும் முதல் இரண்டு ரிங்கிலே ஏற்றுக் கொள்ளப்படும் அவர் அழைப்பு இன்று முழுதாக இரண்டு முறை அடித்து அடங்கியது. “டயர்டா தூங்கி இருப்பா போல. காலையில பேசிக்கலாம்” என்று அவரும் அழைப்பதை நிறுத்தி விட்டு தூங்க சென்று விட்டார். இங்கே ஒலித்துக் கொண்டிருந்த அலைபேசியை அஸ்வந்த் எட்டி எடுக்க முயன்று கொண்டிருக்க, அவன்

தேடல் – 12 Read More »

தேடல் – 11

அஸ்வந்த் சமந்தாவை கூட்டம் நடுவே தேடிக் கண்டு பிடித்து அவளிடம் செல்ல, அவள் தெளிவாக தான் இருக்கிறாள் என்பது மனதிற்கு நிம்மதி அளித்தது. பிரதீகின் மொள்ளமாரி தனத்தை அவளிடம் சொல்லி பிரதீக்கிற்கு நான்கு அடியை போட்டு, அதே ஹோட்டலில் ஆண்கள் தனியாக, பெண்கள் தனியாக என்று நான்கு அறைகளை புக் செய்து எல்லாரையும் அடைத்து வைத்து விட்டு, அறைக்கதவை வெளியே பூட்டி சாவியை கையில் எடுத்துக் கொண்டு  பவனையும், அமிர்தாவையும் மட்டும் தங்களுடன் வீட்டிற்கு அழைத்து செல்ல,

தேடல் – 11 Read More »

தேடல் – 10

தன்னிடம் யாரையும் நெருங்க அனுமதிகாத அஸ்வந்தின் வீட்டிற்குள் மட்டுமல்ல அவன் மன கூட்டிலும் மெல்ல மெல்ல இடம் பிடித்து இருந்தாள் அமிர்தா. யாருக்கும் நின்று பதில் கூட சொல்லாதவன், இப்போதெல்லாம் அவளுக்காக காத்திருக்கிறான். அவள் நலனில் அக்கறை கொள்கிறான். ஆனால் எதையும் வெளிகாட்டிக் கொள்ள தான் அவன் தயாராக இல்லை. தான் இழந்த கடந்த காலத்தை மீட்டெடுக்க பெரும் முயற்சி செய்கிறான். தலை பாரமும், குழப்பங்களும் மட்டுமே எஞ்சுக்கிறதே தவிர, நினைவுகள் திரும்பவில்லை. அமிர்தா உடல் நிலையும்

தேடல் – 10 Read More »

தேடல் – 9

கோவித்துக் கொண்டு போன அஸ்வந்தை தாஜா பண்ணி மீண்டும் அழைத்து வந்தான் பவன். அவனுக்கு சமந்தாவுடன் தனிமை வேண்டும். இங்கே அமிர்தா, அஸ்வந்தை நெருங்க வாய்ப்பு கொடுக்க வேண்டும். ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் என்று அஸ்வந்தை இங்கே விட்டு, சமந்தாவை அழைக்க, அவளோ “நீ தனியா அந்த ஃபிளாட்ல இருந்துக்கோ. நான் இங்க அமிர்தாவோட இருக்கிறேன். அந்த அம்மா என்ன? மிட் நைட் வந்தா கதவ தட்டி சேக் பண்ண போகுது. அப்படியே பண்ணாலும் அமிர்தாவுக்கு

தேடல் – 9 Read More »

You cannot copy content of this page

error: Content copy warning!!