August 2026

அத்தியாயம்- 16

அவள் மனமோ ‘அவனோட குழந்தைனு பொய் சொன்னதுக்கே இப்படி கெஞ்சுறானே, ஒருவேளை உண்மையாவே இவனோட குழந்தையை சுமந்துட்டு இருந்து இருந்தேனா பேசியே என் மனசை கரைச்சி இருப்பான் போலவே. லாயருனு கரெக்ட்டா காட்டுறான். ஒருத்தரோட மனநிலையை பேசியே மாத்திடுறான். அய்யோ சாமி இவன் நமக்கு சுத்தமா செட்டாக மாட்டான்டா. முதல இவனை கழட்டி விடணும். அப்புறம் வயித்துல வளர்ற சனியனை கலைக்கணும்’ என்று நினைத்தவள் உத்தமனின் கரத்திலிருந்து தன் கரத்தை உருவி எடுத்து, “உத்தமன் என்னால ரொம்ப […]

அத்தியாயம்- 16 Read More »

அத்தியாயம்- 15

அதை பார்த்து சிரித்து கேலி செய்த நண்பர்கள் என்ற பெயரில் இருந்த குடிமகன் மற்றும் குடிமகள்களும் அவனை வித விதமாக போதையில் புகைப்படம் எடுக்க, ராதிகாவோ “போயும் போயும் இந்த ஓணான் மூஞ்சிக்கு என்னை போல ஒரு ரதி கேட்குதா? நீ என்ன டா என்னை கழட்டி விடுறது, நான் உன்னை காதலிக்கவேயில்லை தெரியுமா? ஏதோ காலேஜ் டைம்ல இருந்து என் பின்னாடியே சுத்திக்கிட்டு இருந்தீயேனு டைம் பாஸ்க்கு உன் கூட சுத்தினேன். நீ என்னடானா இதையே

அத்தியாயம்- 15 Read More »

அத்தியாயம்- 14

ஒரு வாரம் கழித்து தன் வீட்டிலிருந்த அலுவலகத்தில் அமர்ந்து வேலையை பார்த்துக் கொண்டு இருந்த உத்தமனின் கைப்பேசி சிணுங்கியது. யாரென்று எடுத்து பார்த்தான், புதிய நம்பரிலிருந்து அழைப்பு வர, யோசனையுடன் சுவர் கடிகாரத்தை பார்த்தான். பின் பெருமூச்சு ஒன்றை விட்டு எடுத்து காதில் பொருத்தியவன் “ஹலோ யாரு?” என்று கேட்டான். எதிர்முனையில் இருந்து எந்த பதிலும் வராமல் போக, சற்று கடுப்பானவன் “ஹலோ யாருங்க. டெயிலி இந்த டைம்ல சரியா கால் பண்றீங்க. அட்டன்ட் பண்ணி பேசினா

அத்தியாயம்- 14 Read More »

அத்தியாயம்- 13

சில மாதங்களுக்கு முன்… “உத்தமன் நமக்குள்ள செட்டாகாதுடா. சொன்னா ஏன் புரிஞ்சிக்க மாட்டிக்கிற?” என்று கேட்டபடி அவன் எதிரே இருந்த சோபாவில் அமர்ந்தாள் ராதிகா. அவளை அங்கே பார்த்ததுமே திடுக்கிட்ட உத்தமன் “ராதிகா நீ இங்கே என்ன பண்ற?” என்று கேட்டான். அவளோ அவனை முறைத்துக் கொண்டு “என்னோட வீட்ல உட்கார்ந்துட்டே நான் என்ன பண்றேன்னு கேட்கிற?” என்றவளை பார்த்து அசடு வழிந்தாலும், “அது எனக்கும் தெரியும்டி. ஆனால் நான் இப்போ உன்னோட லவ்வரா இங்கே வரல.

அத்தியாயம்- 13 Read More »

அத்தியாயம்- 12

சில நிமிடங்கள் தான் முத்தமிட்டு இருப்பான் அவளை, அவள் இதழில் தன் இதழை இணைத்ததுமே அவனின் நினைவுகள் எங்கெங்கோ சென்று விட, மின்னல் அடித்தது போல் சட்டென்று அவளிடமிருந்து விலகி இருந்தான் உத்தமன். அவன் கண்ட காட்சிகள் அனைத்துமே மங்கலாகவே தெரிய, இதயமோ வேகமாக துடிக்க ஆரம்பிக்க, உதடோ நடுங்கியபடி தன்னையும் அறியாமல் “அ… அங்கயற்கண்ணி” என்று உச்சரித்தது. அதுவரை அவனின் இதழின் ஸ்பரிசத்தில் மதி மயங்கி இமைகளை மூடி லயித்து போய் இருந்தவள், அவன் அங்கயற்கண்ணி

அத்தியாயம்- 12 Read More »

அத்தியாயம்- 11

இந்த ஒரு வாரமாக ஏதோ யோசனையிலே சுழன்றுக் கொண்டு இருந்த கருப்பையாவை பார்த்த அவன் ஆளோ “என்ன அண்ணா ஒரு வாரமா ஏதோ ஒரு யோசனையிலே இருக்கீங்க?” என்று கேட்டான். கருப்பையாவோ வாயில் சுருட்டை வைத்து ஊதிக் கொண்டே “அது இல்லடா, நம்ம லாயர் சார் இருக்கார்ல” “ஆமாண்ணே அவருக்கு என்ன?” என்று கேட்க, “அவருக்கு இன்னும் கல்யாணம் ஆகலைனு தானே சொல்லிட்டு இருந்தாரு. ஆனா அன்னிக்கு பேசிட்டு இருக்கும் போது, ஒரு பொண்ணோட சத்தமும் ஒரு

அத்தியாயம்- 11 Read More »

அத்தியாயம்- 10

ஒரு மணி நேரத்தில் மீண்டும் நேசமில்லியின் குரல் கேட்க, ஹாலில் குழந்தையை வைத்துக் கொண்டு மார்பில் போட்டபடி உறங்கிக் கொண்டு இருந்த உத்தமன் நேசமல்லியின் அழைப்பில் திடுக்கிட்டு எழுந்தாலும், பிள்ளையை பத்திரமாக பிடித்துக் கொண்டே எழுந்தவன் வேகமாக அறையை நோக்கி ஓடினான். உத்தமனை பார்த்ததும் தான் அவளுக்கு உயிரே வந்தது போல் இருந்தது. அதுவும் அவன் கரத்தில் குழந்தையை பார்த்ததும் அவளுக்கு கண்ணீர் முட்டிக் கொண்டு வர, அவள் அருகில் சென்ற உத்தமனோ, “ஏய் நேசமல்லி இப்போ

அத்தியாயம்- 10 Read More »

அத்தியாயம் – 9

அன்று இரவு வசதியாக குழந்தை உறங்குவதற்கு ஏற்பாடு செய்து வைத்தவன் நேசமல்லிக்கும் மெத்தையில் நன்றாக படுக்க வசதி செய்துக் கொடுத்தான். பின் அறையிலிருந்து வெளியேற எண்ணியவனின் கரத்தை சட்டென்று பிடித்த நேசமல்லி, “எங்க போறீங்கப்பா?” என்று கேட்டாள். அவனோ “வெளியே தான்” “ஏன்?” “ஏன்னா? தூங்குறதுக்குடி. தூக்கம் வருது. நான் சரியா தூங்கியே பல மாசம் ஆச்சு” என்று ஒரு வேகத்தில் அவன் சொல்லி விட, அவனை புருவம் சுருக்கி பார்த்தவள், “பல மாசம் ஆச்சுனா? புரியல?”

அத்தியாயம் – 9 Read More »

அத்தியாயம் – 8

அவன் போவதையே பேச்சற்று போய் பார்த்துக் கொண்டு இருந்தனர் அங்கே நின்று இருந்த நபர்கள். அதிலும் பாபுவையும் போகும் உத்தமனையும் மாறி மாறி பார்த்தவர்கள் உத்தமன் தலை மறைந்ததும் சத்தமாக சிரிக்க தொடங்கினர். “என்ன பாபு சார். லாயர் மாப்பிள்ளையை வளைச்சி போட பார்த்தீங்களா?” என்று கேட்டு அவரை கேலி செய்ய ஆரம்பித்து இருந்தனர். அதில் கோபம் கொண்ட பாபுவோ மற்றவர்களை முறைத்து பார்த்து “நீங்க எல்லாம் மட்டும் என்ன ஒழுங்கா. வீட்ல ஒரு லாயர் இருந்தா

அத்தியாயம் – 8 Read More »

அத்தியாயம்- 7

இப்படியே ஒரு பத்து நாள் சென்று இருக்கும். நேசமல்லிக்கு உடல் சிறிது சிறிதாக சரியாகி தேறிக் கொண்டு வர, அவளை டிஸ்சார்ஜ் செய்ய சொல்லி உத்தமன் வற்புறுத்திக் கேட்டுக் கொண்டதால் மருத்துவர்களும் சரி என்று ஒப்புக் கொண்டனர். அவர்கள் ஒப்புக் கொண்டதற்கு மற்றொரு காரணம் தாயையும் பிள்ளையையும் அவன் பத்திரமாக பார்த்துக் கொண்ட விதம் தான்.   இந்த பத்து நாளும் உத்தமனுக்கு தான் பெரும் திண்டாட்டமாகி போனது. அவளுக்கும் குழந்தைக்கும் தேவையானதை எல்லாம் பார்த்து பார்த்து

அத்தியாயம்- 7 Read More »

You cannot copy content of this page

error: Content copy warning!!