அசுரன்-2
ஆரம்பத்தில் இருந்தே ஜோ பிறரை நம்பாமல் முக்கிய வேலைகளைத் தானே எடுத்துச் செய்வது அவன் வழக்கம். அன்றும் அப்படித்தான் ஒரு ஒப்பந்தத்தைப் பேசி முடிக்க வேண்டிய சூழ்நிலை. தன்னுடைய உயிர் நண்பன் மோகனுடன், மும்பையின் வெளிப்புறத்தில் இருக்கும் சொகுசு பங்களாவில் முகாமிட்டான். எதிர்பார்த்தபடியே ஒப்பந்தம் நல்லபடியாய் நிகழ்ந்தேறியது. நள்ளிரவு என்றும் பாராமல் ஒப்பந்த வேலை முடிந்ததும் ஜோ அங்கிருந்து புறப்பட ஆயத்தமானான். இருவரும் பங்களாவில் இருந்து வெளியில் வரும் நேரத்தில் எங்கிருந்தோ பாய்ந்து வந்த துப்பாக்கிக் குண்டு, ஜோவின் […]
