அசுரன்-12
நிலவினை தொலைத்துவிட்டு ஏங்கித் தவித்த வானம், தன் சோகத்தைப் பிறருக்கு உணர்த்த மேனியெங்கிலும் இருள் வண்ணம் பூசிக் கொண்ட நள்ளிரவுப் பொழுது அது. என்றேனும் ஒரு நாள் என் தேவதைக்கு எனது காதலின் வீரியம் விளங்கும் எனும் நம்பிக்கையோடு நிம்மதியாய் தூங்கிக் கொண்டிருந்தான் ஜோ. அங்கிதா அமர்ந்திருந்த இடத்திற்கு நேர் மேலே சுவற்றில் கீறல் இருக்க, அதன் வழியே மழைத் தண்ணீர் கசிய ஆரம்பித்தது. வெளியில் மழை அதிகமாகப் பெய்த காரணத்தினால், தண்ணீர் சொட்டு சொட்டாக […]
