நேசப்பிணி-11
ஆற்றைக் கடந்து வந்ததும், அவர்கள் கால்கள் கரடுமுரடான ஒரு மலைப் பாதையில் பதிந்தன. பாதையின் இருபுறமும் வானை முட்டும் அளவிற்கு ஓங்கி உயர்ந்து வளர்ந்திருந்த மரங்கள், அப்பகுதியை பட்டப் பகலிலேயே இரவு போல் காட்சியளிக்கச் செய்திற்று. அவற்றின் கிளைகளில் இருந்து நீண்டு தொங்கிய கொடிகள் ஒரு இயற்கையான திரைச்சீலையை அந்தப் பாதைக்கு உருவாக்கியிருந்தது. அடர்த்தியான புதர்கள் பாதையின் ஓரங்களை ஆக்கிரமித்திருந்தன. எங்கு பார்த்தாலும் பசுமை போர்த்தியது போலிருந்தது. மயிலா குமரன் கையை பற்றி கொண்டு அந்தப் பாதையில் […]
