அத்தியாயம் 16
ஜோஸ்வினி சிலையாக அமர்ந்திருப்பதை பார்த்த அபிஷேக் திகைத்து போய் அவளை கூப்பிட்டான். “என்னாச்சுங்க ஜோ?” என்று அவளை கேட்டான். “நீ போன வை. நான் வரேன்” என்று அபிஷேக்கை முறைத்தபடி போனை அணைத்தாள். “ஏன் ஜோ டென்ஷனா இருக்கீங்க?” “நீ ஷியாமா அடிச்சியா?” “ஜோ… ஜோ” என்று அவன் வார்த்தைகள் வராமல் தடுமாறினான். “சொல்லுடா” “ஆமா ஜோ. அடிச்சேன்” “எதுக்கு அடிச்ச?” “அ… அது” என்றவன் எப்படி அவன் செய்ததை பற்றி சொல்வது என தயங்கினான். […]
