சுவாசம் – 3
ஆடவர்கள் இருவரும் ஹாலில் காத்திருக்க, அரை மணிநேரம் கழித்து பெண்ணவளின் காயத்திற்கான மருத்துவத்தை முடித்துவிட்டு வெளியே வந்தாள் இஷா. அவள் வந்ததுமே அமர்திருந்த இரு ஆடவர்களும் அவளை சூழ்ந்து கொள்ள, அக்னியை பார்த்த இஷா “அண்ணா அந்த பொண்ணுக்கு எப்படி அடிப்பட்டுச்சு.. யாரு அவங்க” என்று கேள்வியை எழுப்ப, அதற்கு பதிலளித்த அக்னி “எனக்கு என்ன நடந்துச்சுன்னு தெரியாது பேபி.. அந்த பொண்ண யாரோ துரத்திட்டு வந்தாங்க.. நான் அந்த வழியா போனதால சத்தம் கேட்டு காப்பாத்துனேன்.. […]
